உலகம்

ஹெலி விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி..! மீட்புக் குழுக்கள் விரைவு..!

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீட்புக் குழுக்கள் அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஜனாதிபதி ரைசியின் ஹெலி விபத்தின் இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டர் வடகிழக்கு ஈரானில் ‘திடீர் தரையிறக்கத்தை’ எதிர்கொண்டது.

இந்த ஹெலிகொப்டரில் ஈரான் வெளியுறவு அமைச்சர், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் ஒரு முக்கிய இமாம் இருந்தனர்.

ஈரானிய தேசிய பாதுகாப்பு படைகளின் ட்ரோன்கள், நாய்கள், ரேஞ்சர்கள் துருப்புக்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *