உள்நாடு

இடைநிறுத்தப்பட்டுள்ள மாத்தளை- கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை..!

கொவிட் நிலைமைக்கு முன் ரயில்வே திணைக்களத்தினால் மாத்தளை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.50 மணிக்கு கொழும்பு கோட்டை வரையிலான விசேட ரயில் சேவையொன்று தினசரி நடாத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட ரயில் சேவை தினம்தோறும் கொழும்பு நோக்கிச் செல்லும்( பயணப் பொதிகளூடன்) பயணிகளுக்கு நல்ல வசதியாக இருந்து வந்த இச்சேவை எதுவித முன்னறிவித்தலுமின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி ரயிலில் பயணம் செய்பவர்கள் மாத்தளையிலிருந்து கண்டிவரை செல்லும் ரயில் சென்று கண்டியில்  இறங்கி  அங்கு கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலிலியே பயணிக்க வேண்டியுள்ளனர்.
எனவே பயணிகள் நன்மைகருதி இடைநிறுத்தப்பட்ட மாத்தளை- ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் உடன் நடவடிக்கையெடுக்கவேண்டுமென பலரும் கோருகின்றனர்.
(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *