Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

வெசாக் தானசாலைகளுக்கான எழுத்துமூல அனுமதிகளை பெற கோரியுள்ள சுகாதார வைத்திய அலுவலகம்..!

தற்போதைய வெசாக் மற்றும் வரும் பொசன் காலங்களில் தானசாலைகளை (தன்சல்) நடாத்தவிருப்போர் அதுகுறித்து சுகாதார பரிசோதகர்களது எழுத்துமூலமான அனுமதி பெறப்படவேண்டுமென சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலன்கருதி தானசாலைகள் நடாத்தப்படும் இடங்கள், பொறுப்பாளர்கள்  உணவுகள் பண்டங்கள் தயாரிப்போர் அதற்கு ஒத்துழைப்பு நல்குவோர் பரிமாறுவோர் அவர்களது ஆரோக்கிய நிலைமைகள் உணவுப் பண்டங்கள் தயாரிக்கப் பயன்படும் உபகரணங்கள் பற்றிய  விபரங்கள் சுகாதார  பரிசோதகர்களது பரிசோதனைகளையடுத்து உறுதிசெய்யப்படும் எழுத்து மூலமான அனுமதி பெறப்பட்டிருக்கவேண்டுமென்பதுடன் தவறுவோர்மீது நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெசாக் மற்றும் பொசன் தினங்களைமுன்னிட்டு தானசாலைகள் நடாத்தவிரும்புவோருக்கு நடளாவியலவிலுள்ள சதொச நிறுவனங்கள் சலுகை விலைகளில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வசதிசெய்துள்ளது.
இந்நிலையில் அரசு இவ்வருட தேசிய வெசாக் தின வைபவத்தை மாத்தளையில் ஏற்பாடு செய்துள்ளது.
(உக்குவளை நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *