உள்நாடு

அக்குறணை ஜெம்மியதுல் உலமாவின் முன் மாதிரியான செயல்.

5/05/ 2024 திகதியாகிய இன்று சுபொ.த (சா/த) பரீட்சையின் இறுதி நாளாகும்.

முற்பகல் 11:40 மணிக்கு பரிட்சை முடிவடைந்ததும், மாணவர்கள் பாடசாலை வளாகத்திலோ பாதைகளிலோ பின்வரும் விடயங்களை தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

◉ மை அடித்து ஆடைகளை நாசமாக்கிக் கொள்ளல்.

◉ கைகலப்பில் ஈடுபடுதல்

◉ குழுக்களாக பிரிந்து சண்டையிடுதல்

◉ கேலி கூத்துகளில் ஈடுபடுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறும்இ

⨳ பெற்றோர் குறித்த நேரத்திற்கு பாடசாலைக்கு வந்து தமது பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொள்வதுடன்இ

⨳ இவ்விடயத்தை கவனிப்பதற்கு அக்குரனை கலாச்சார குழுவினரும்இ அலவதுகொட பொலிசாரும் விசேடமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்

⨳ தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *