உள்நாடு

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக அன்வர் தெரிவு..!

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் பத்தரமுல்ல சுகுருபாய 19 ஆவது மாடி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகத் தெரிவின் போதே உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவராக மிகத் திறமையாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(எம் எப்.நவாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *