விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். சான்டோ தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு .

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கான நஜ்முல் ஹொசைன் சான்டோ தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் குழாம் இன்று (14) அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தவிர்ந்த அத்தனை அணிகளும் தமது 15 வீரர்கள் கொண்ட உலகக்கிண்ண அணியை அறிவித்திருந்தது.இந்நிலையில் இன்றைய தினம் பங்களாதேஷ் அணி தமது 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை அறிவித்துள்ளது. இதில் நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்த சிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற வீரர்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர். இத் தொடரில் பங்களாதேஷ் அணி 4:1 என தொடரை கைப்பற்றியிருந்தது.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியை இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நஜ்முல் ஹொசைன் சான்டோ வழிநடாத்துகின்றார். அத்துடன் துடுப்பாட்ட வீரர்களாக டன்சிட் ஹசன் தமீம், தௌஹீட் ஹிரிடோய்,சௌமியா சர்கார் மற்றும் ஜாகிர் அலி ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் சகலதுறை வீரர்களாக அனுபவமிக்க சகீப் அல் ஹசனுடன் முஹம்மதுல்லா ரியாத் மற்றும் மெஹ்தி ஹசன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்வீர் இஸ்லாம் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக முஸ்தபிசுர் ரஹ்மானுடன் டஸ்கின் அஹமட், சரீபுல் இஸ்லாம், ஹசன் சகீப் மற்றும் ரிஷாட் ஹுசைன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இத் தொடருக்கான பங்களாதேஷ் அணியின் மேலதீக வீரர்களாக சுழல்பந்து துடுப்பாட்ட வீரரான அபீப் ஹொசைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் மொஹமுட் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *