உள்நாடு

தர்காநகரில் winner புத்தக நிலையம் ஹக்கீமினால் திறந்து வைப்பு..!

தர்கா நகரில் Winner புத்தக விற்பனை நிலையம் ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோர் திறந்து வைத்தனர.

பேருவளை பிராந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் winner புத்தக நிலைய உரிமையாளருமான ரபீஸ் ஹம்ஸா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும் ரூமி ஹாஷிம் பவுண்டேசன் ஸ்தாபகருமான டொக்டர் ரூமி ஹாஷிம்,அதன் செயலாளர் அல்-ஹாஜ் ஜெஸூக் அஹமட் தர்கா நகர் அல்-ஹம்ரா மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.இஸட்.எம்.நயீம்,கவிஞர் ரீ.எம்.ஸபா உட்பட எழுத்தாளர்கள்,ஊடவியலாளர்கள்,பேருவளை பிராந்தி எடுத்தாளர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,அரபு போன்ற மொழிகளில் பல பயனுள்ள நூல்கள்,பாடசாலை உபகரணங்கள் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கதை,கவிதை மற்றும் பயனுள்ள பல பெறுமதிமிக்க நூல்கள் இங்கு காணப்பட்டது.

அரதிதிகள் பெருமதியான நூல்களை கொள்வனவு செய்து விற்பனையை தொடக்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *