விளையாட்டு

உலகக்கிண்ணத்துக்கான இலங்கைக் குழாம் அமெரிக்கா சென்றடைந்தது.

9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி நேற்று (13) இரவு இலங்கையிலிருந்து புறப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள 20 அணிகளில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தவிர்ந்த ஏனைய அணிகள் தமது 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி இலங்கையின் உலகக்கிண்ணத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அறிவிக்கப்பட்ட இலங்கை அணி நேற்றைய தினம் இரவு மத வழிபாடுகளை முடித்துக் கொண்டு இரவு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது. இதில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுவரும் மகேஷ் தீக்சன, துஷ்மந்த சமீர ஆகியோருடன் மேலதீக வீரரான உலகக்கிண்ண அணியில் இணைக்கப்பட்ட விஜயகாந்த் வியர்காந்த் ஆகிய மூவரைத் தவிர ஏனைய வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் இன்று அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *