உள்நாடு

பிரபல சமூக சேவையாளர் பேருவளை கமால்தீன் காலமானார்..!

பேருவளை நகர பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான, அல்ஹாஜ் கமால்தீன் அவர்கள் (12.05.2024) தனது 62வது வயதில் காலமானார்.
அழுத்கமை தர்கா நகர் சீனாதுறையைச் சேர்ந்த இவர், காலஞ்சென்ற முகம்மது தாஸிம் மற்றும் உம்மு நோனா தம்பதியின் புதல்வருமாவார். இவர் நான்கு பிள்ளைகளின் தகப்பனாரும் ஆவார்.
பேருவளை நகரில் ஒரு பள்ளிவாசல் இல்லாத குறையை நிவர்த்தி செய்யுமுகமாக, தனது வர்த்தக நிலையத்தின் மேல்மாடியை மக்களுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள இருவது வருடங்களுக்கு முன்பு இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அதன் பின்னர் அவ்விடத்திலே பள்ளிவாசல் அமையப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரின் அளப்பெரிய இப்பணியும், தியாகமும் இன்றும் மக்களின் பாராட்டுக்குரியதாக அமைந்தது.
அன்னாரின் ஜனாஸா, திங்கட் கிழமை (13/05/2024), லுஹர் தொழுகையை அடுத்து, தர்கா நகர் முஹிய்யத்தீன் ஜுமுஆ மஸ்ஜித் (பெரிய பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *