உள்நாடு

சயிதா பவுண்டேஷனின் பாடசாலை கட்டிடத்திற்கான இரண்டாம் கட்ட நிதி..!

கொழும்பு சயிதா பவுண்டேஷன் அமைப்பின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளான கடையமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், தாராவில்லு முஸ்லிம் வித்தியாலயம், பத்துலுஓயா சிங்கள பாடசாலை, மாரவில சிங்கள பாடசாலை மற்றும் ஆராச்சிகட்டுவ சிங்கள பாடசாலை என்பவற்றிற்கு தலா 38 இலட்சம் பெறுமதியான கட்டிடம் அமைப்பதற்கான நிதி சயிதா பவுண்டேஷன் அமைப்பின் ஊடாக ஒதுக்கப்பட்டு அதற்கான முதற்கட்டமாக ஏற்கனவே தலா 15 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதுடன் கட்டிடத்தின் ஆரம்ப கட்ட நிர்மான பணிகள் இடம்பெற்று வருகிறது.

புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளில் மூன்று பாடசாலைகளான ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், பத்துலுஓயா சிங்கள பாடசாலை மற்றும் தாராவில்லு முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றிக்கு தலா 13 இலட்சம் ரூபாய் இரண்டாம் கட்ட நிதி எதிர்வரும் 2024/05/13 ம் திகதி வழங்கப்பட உள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பொதுஜன பெரமுன முன்னணியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளருமான ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு சயிதா பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌசி மேற்படி நிதியை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக சயிதா பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸி, மற்றும் சனத் நிசாந்த பெரேராவின் பாரியாரும், சட்டத்தரணியுமான சாமரி பிரியங்கா ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

 

(கற்பிட்டி எம். எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *