உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு..!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழ் உள்ள புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (12) பகல் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த தெரிவில் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஏ.பீ. ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் உதவித் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரோடு சேர்த்து 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயலாளர் : அஷ்ஷெய்க் அஸீம் (ரஹ்மானி)

பொருளாளர் : அஷ்ஷெய்க் ஜம்ஸித்

உப தலைவர்கள் : அஷ்ஷெய்க், அல் ஹாபிழ் ஏ.எம்.ரியாஸ் (தேவ்பந்தி), அஷ்ஷெய்க் சௌக்கி

உப செயலாளர் : அஷ்ஷெய்க் இமாம்தீன் (அஷ்ரபி)

ஏனைய உறுப்பினர்கள் :

அஷ்ஷெய்க் சல்மான், அஷ்ஷெய்க் கரீம், அஷ்ஷெய்க் அப்துல் ஹஸ்பான், அஷ்ஷெய்க் சனூஸ், அஷ்ஷெய்க் முஹ்ஸின்,

அஷ்ஷெய்க் ஆதிப், அஷ்ஷெய்க் நஸ்பான், அஷ்ஷெய்க் சனூஸ் மற்றும் அஷ்ஷெய்க் அமீன்

 

 

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *