உள்நாடு

டயனாவைப் போன்று மேலும் 10 எம்.பீ க்களுக்கு இரட்டை குடியுரிமை..! அவர்கள் உடன் பதவி விலக வேண்டும்..! -ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள்.

தற்போது மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

டயானா கமகேவைப் போன்று மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதாக செய்திகள் கேள்விப்பட்டு இருக்கிறோம், அவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும், இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளிலிருந்து மரியாதையுடன் உடனடியாக விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் கட்சித் தலைவர்கள் தமது பிரதிநிதிகளை கவனமாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை விவகாரத்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டயனா கமகேயைப் போன்று மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.எனவே இந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் மரியாதையோடு தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலக வேண்டும்.இன்றேல் அவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சோபித தேரர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *