உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இம்முறை 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 18 வயதைப் பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *