உள்நாடு

உக்குவளை பிரதேசத்தில் அதிகரித்துள்ள குரங்குகளின் நடமாட்டம்..!

உக்குவளை பிரதேசத்தில் சமீபகாலமாக குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது

இக்குரங்குகள் கூட்டமாக வந்து இங்குள்ள வீட்டுத்தோட்டங்களிலுள்ள காய் கனிகளை பறித்தெடுத்துச் செல்கின்றன. இதனால் சிறு தோட்ட உரிமையாளர்கள் தமது உற்பத்திகளால் பயன்பெறமுடியாமை குறித்து கவலைப்படுகின்றனர்.
அவ்வாறிருக்க தெரு நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளமையும் காணமுடிகிறது. இத்தெருநாய்களுள் நோயுற்ற சொறிநாய்களும் திரிவதால் இந்நாய்கடிகளுக்குள்ளான சிலர் வைத்திய சாலைகளில் சிகிச்சைக்காக செல்வதையும் காணமுடிகிறது. அதுமட்டுமின்றி பிரதான தெருக்களில் இந்நாய்கள் திரிவதால் அதனுடன் வாகன மோட்டார் சைக்கிள்கள்  மோதி விபத்துக்களும் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *