விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். ஹசரங்க தலைமையிலான இலங்கை குழாம் அறிவிப்பு. மேலதீக வீரராக வியாஸ்காந்த்.

9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்கான வனிந்து ஹசரங்க தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலதீக வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 9ஆவது உலகக்கிண்ண ரி20 தொடருக்காக பெரும்பாளான அணிகள் தமது 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை அறிவித்திருக்க இலங்கை கிரிக்கெட் சபை இன்றைய தினம் (9) தமது 15 வீரர்கள் கொண் அணியை அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை பெரிய அளவிலான மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரில் பங்கேற்ற அதே வீரர்களே உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களைப் பொருத்தமட்டில் ஆரம்ப வீரர்களான பெதும் நிஸ்ஸங்க மற்றம் குசல் மெண்டிஸ்ஆகியோருடன் மத்திய வரிசையில் கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இதில் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களான செயற்படவுள்ளனர்.

மேலும் சகலதுறை வீரர்கள் பட்டியலில் அணித்தலைவரான வனிந்து ஹஸரங்கவுடன் முன்னாள் ரி20 அணியின் தலைவரான தசுன் ஷானக, அனுபவமிக்க துடுப்பாட்ட சகலதுறை வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோருடன் சுழல்பந்து சகலதுறை வீரர்களான தனன்ஜய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்களை பொருத்தவரை இந்திய பிரீமியர் லீக் தொடரில் சென்னை அணிக்காக அசத்திவந்த இளம் வீரரான மதீஷ பதிரண , கல்கத்தா அணியில் இடம்பெற்ற துஷ்மந்த சமீர , மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளஉ நுவான் துஷார மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோருக்கு இக் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 15 வீரர்கள் தவிர 4 மேலதீக வீரர்கள் இக் குழாத்துடன் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழ் பேசும் வீரரான சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ளார். அவருடன் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ , ஜனித் லியனகே மற்றும் வேகப்பந்து வீச்சாளரான அசித பெர்னாண்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை அணி குழு டீ இல் தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுடன் இடம்பெற்றிருக்க எதிர்வரும் ஜுன் 3ஆம் திகதி முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழாம்.

வனிந்து ஹஸரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உப தலைவர்)
குசல் மெண்டிஸ்
பெதும் நிஸ்ஸங்க
கமிந்து மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
அஞ்செலோ மெதிவ்ஸ்
தனன்ஜய டி சில்வா
துனித் வெல்லாலகே
தசுன் ஷானக
மஹீஷ் தீக்ஷன
துஷ்மந்த சமீர
மதீஷ பதிரண
டில்சான் மதுசங்க
நுவான் துஷார

மேலதிக வீரர்கள் – விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜனித் லியனகே, அசித பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *