உள்நாடு

கல்பிட்டி பிரதேச முசல்பிட்டி கிராம சமுர்திப் பயனாளிக்கு வீடு கையளிப்பு .

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ரன் விமன விசேட வீட்டுத் திட்ட வேளைத்திட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முசல்பிட்டி சமுர்த்திப் பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிக்கு இன்று (9) வீடு கையளிக்கப்பட்டது.

கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் முசல்பிட்டி சமுர்த்தி சேவகர் பிரிவிற்கு உட்பட்ட சன்முக லிங்கம் விஷ்வநாதன் எனும் சமுர்த்திப் பயனாளிக்கு ரன் விமன விசேட வீட்டுத் திட்ட வேலைத்திட்டத்திற்கு அமைய ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெருமதியான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (9) கல்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம். விமல இந்திக ஜயசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் தினூஷா மதுரங்கி பெர்ணான்டோ, கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி உதவியாளர் டபல்யூ. அன்டன் சமந்த பெர்ணான்டோ, முசல்பிட்டி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நிஸ்மி, திகழி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். ஆசீர் ஆகியோருடன் முசல்பிட்டி பிரதேச வாசிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *