உள்நாடு

டயனாவின் உறுப்பினர் பதவி வெற்றிடம். – சபாநாயகர் அறிவிப்பு.

உயர் நீதிமன்றின் உத்தரவை அடுத்து டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய குடியுரிமை சர்ச்சைகள் காரணமாக டயான கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியில்லை என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்இ உயர் நீதிமன்றின் தீர்ப்பை அடுத்து நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *