உள்நாடு

சமூக சேவையாளர் பஸீர் லத்தீப் காலமானார்.

கொழும்பு 02 வேகந்தை ஜும்ஆ மஸ்ஜித் நிருவாக சபைத் தலைவர் அல்ஹாஜ் பஸீர் லத்தீப் அவர்கள் வபாத்தானார்கள். அன்னாரின் ஜனாஸா வேகந்தை ஜும்ஆ மஸ்ஜித்தில் வைக்கப்பட்டு ஜனாஸா நேற்று அஸர் தொழுகையின் பின்னர் ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளனவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

எல்லோருடனும் இன்முகத்துடன் உறவாடும் இவர் வேக்கந்தை பள்ளிவாசலில் நீண்ட காலம் சேவையாற்றி பல்வேறு உதவிகளை செய்து வந்த ஒரு சிறந்த தலைவராக இவர் காணப்பட்டார். திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவர் காலமானார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இவரது ஒரேயொரு புதல்வரும் திடீரென மரணமானதில் இருந்து சற்று மன வேதனையுடன் இருந்த நிலையில் இவரும் காலமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *