உள்நாடு

தர்காநகரில் மஷாயிகுமார் கந்தூரி.

வரலாற்றுப் புகழ்மிகு தர்கா நகர் ஆலிப் ஸாஹிப் அப்பா தர்காவில் 162 வது வருட மஷாயிகுமார் கந்தூரி கொடியேற்ற வைபவம் நாளை 9ம் திகதி (9-5-2024) வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் இடம்பெறும்.

குத்புஸ்ஸமான் நாயகம் அஷ்செய்ஹ் ஹஸன் இப்னு உதுமானுல் மஹ்தூமி (ரலி) ஆலிம் ஸாஹிப் அப்பா அடக்கியுள்ள இந்த தர்காவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி அன்று இரவு முதல் தொடர்ந்து 8 இரவுகள் இஷாத் தொழுகையின் பின்னர் மஷாயிகுமார் ராத்தீப் ஓதப்படும்.

மே மாதம் 18ம் தேதி சனி பின் நேரம் ஞாயிறு இரவு மஷாயிகுமார் ராத்தீபும் இரவு கந்தூரியும் நள்ளிரவு ஸியாரத் நிகழ்வும் இடம் பெறுவதோடு 19ஆம் திகதி பகல் பெரிய கந்தூரியுடன் நிறைவு பெறும்.

செய்யது செய்ஹு ஜிப்ரி பின் செய்யது முஹம்மத் ஜிப்ரி மௌலானா செய்யது அஸ்லம் ஜிப்ரி பின் செய்யது முஹம்மது அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகளை தர்ஹா பரிபாலன கமிட்டி மேற்கொண்டுள்ளது.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *