விளையாட்டு

என் கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தை மஹேந்திர சிங் டோனி. – மதீஷ பத்திரன .

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மஹேந்திர சிங் டோனி தான் என் அப்பா என இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங் அணியின் நட்சத்திரமுமான மதீஷ பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சென்னை சூப்பர் கிங் அணிக்கான இதுவரையில் 9 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள மதீஷ பத்திரன சென்னை அணியினதும் முன்னாள் அணித்தலைவரான மஹேந்திர சிங் டோனியினதும் செல்லப்பிள்ளையாக இருந்துவருகின்றார். மேலும் சென்னை அணியின் பல வெற்றிக்கு பத்திரனவின் பந்தவீச்சு மிகப் பெரிய பங்கினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமது சமூக வலைத்தளத்தில் மதீஷ பத்திரனவின் கானொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அக் கானொளியில் மதீஷ பத்திரன இவ்வாறு கறுப்பிட்டுள்ளார். ”என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.” என்று கூறியுள்ளார் மதீஷ பத்திரன.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *