உள்நாடு

‘முஹம்திரமலாகே அலி உதுமான்’ குடும்பத்தினரின் ஒன்றுகூடல்..!

இந்நாட்டு சிங்கள மன்னன் ஸ்ரீ விக்கிம ராஜசிங்கவின் ஆட்சியில் பணியாற்றிய மறைந்த முஹம்திரமலாகே அலி உதுமான் என்பவரது பெயரில் குடும்ப அங்கத்தவர்களது ஒன்றுகூடலொன்று கம்பளை லோட்டஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது  காலம்சென்றவர்களது வெளிநாட்டு உள்நாட்டு  உறவினர்கள் சுமார் 800 பேர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் காலம்சென்றவர்களது கடந்தகால பணிகள் பற்றிய உறவினர்களது உரையும் அவரது பெயரில் பிரார்த்தனையும் இடம்பெற்றன.
கண்டி மடவளை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூஷணம் எச் எம்.மன்சூரின் தாயாரின் பாட்டனாரான காலம்சென்றவரின் பெயரில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிரமுகரும் உறவினருமான ஹரீஸ் ஏற்பாடுசெய்திருந்தார்.
(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *