உள்நாடு

இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் காத்தான்குடி விஜயம்..!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம்களின் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (02) காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சம்மேளனத்தின் உப தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் காத்தான்குடி மெத்தை பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷெய்யித் அலிசாஹிர் மெலலானா , காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், காத்தான்குடி மெத்தை பெரிய ஜும் ஆப் பள்ளிவாயல் தலைவர் ரவூப் ஏ மஜீட், மற்றும் சம்மேளனத்தின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ,ஊர் பிரமுகர்கள், பாடசாலை மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கு மெத்தைப் பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் மற்றும் சம்மேளனம் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் சம்மேளனத்தின் செயலாளரினால் மஹஜர் ஒன்றும் கையளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எம்.பஹத் ஜுனைட்)

படங்கள்: MSM நூர்தீன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *