உள்நாடு

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த இளம் தாய் கைது.- கண்டல்குடாவில் சம்பவம்

கல்பிட்டி கண்டல்குடா பிரதேசத்தில் 39 நாட்களேயான பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிய இளம் தாய் கல்பிட்டிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்டல்குடா கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் 32 வயதான இளம் தாயொருவர் கணவனுன் ஏற்பட்ட குடும்பத் தகராரு காரணமாக தனது 39 நாட்களேயான பச்சிளம் குளந்தையை இன்று (2)  தன் வீட்டுக் கிணற்றில் அதிகாலை போட்டுள்ளார்.

இதனால் அப் பச்சிளம் குளந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் ,இளம் தாய் கல்பிட்டிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு பிரதேச மக்கள் படையெடுப்பதை அவதானிக்கக் கிடைத்தது. மேலதீக விசாரணைகளை கல்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *