உலகம்

ஓமானில் நாளை கடும் காற்று, கன மழை எச்சரிக்கை..! பாடசாலைகளுக்கு விடுமுறை..!

ஓமான் நாட்டில் நாளை (2) கடும் காற்று,கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அந் நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தவிர்க்கு முகமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந் நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில் சகல பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளது.அத்தோடு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் அந் நாட்டு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

(அத்தாஸ் ரூமி -ஓமான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *