உள்நாடு

‘வண்ணம்’ :ஹபுகஸ்தன்ன நாவலர் வித்தியாலயத்தில் மாபெரும் சித்திரக்கண்காட்சி..!

“வண்ணம் “இரசனையில் தேடல் எனும் தொனிப்பொருளில் இரத்தினபுரி ஹபுகஸ்தன்ன நாவலர் வித்தியாலயத்தில் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மாபெரும் சித்திரக்கண்காட்சியொன்று பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏப்ரல் 25,26 &27 ம் திகதி நடைபெற்ற இக் கண்காட்சியை அதிபர் ஆர். சசிகுமார் தலைமையில் சித்திரப் பாட ஆசிரியர் பி. ரகுராஜ் பாடசாலைக்குழாமுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தாண்டி தேயிலைத் தோட்டத்தில் இப்பாடசாலை அமைந்திருந்தபோதும் சித்திரங்களின் வியப்பினை கண்டுகளிக்க 17 வெளிப்ப்பாடசாலைகளிலிருந்து இக்கண்காட்சியை கண்டுகளிக்க வந்தமை வெற்றியை எடுத்துரைக்கிறது.

அஸ்கா அமீன்-ஆசிரியை ( இரத்தினபுரி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *