பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்..! புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது; “ரமழானின் ஆத்மீக பக்குவங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை கட்டமைப்பை கெட்டியானதாக்கும். நாலாபுறமும் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களை தோற்கடிக்க ஹலாலான சிந்தனைகள் துணைபுரியும். இந்த நம்பிக்கையில் நமது வியூகங்களை அமைப்பதே அவசியம். அல்லாஹ்வின் திருப்தியை அடிப்படையாகக்கொண்ட நமது இலட்சியங்களில் குறுக்கிட எவரையும் அனுமதிக்க முடியாது. இந்த ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களின்போது, வீண்சர்ச்சைகள் எழுமளவுக்கு முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது. இவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. இதனால், இவ்விடயத்தில் விழிப்புத் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் முஸ்லிம்களை குழப்பவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகளுக்கு படிப்பினையாக, பெருநாள் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். திரைமறைவில் செயற்பட்டு, நமது இலட்சியங்களை கபளீகரம் செய்வோருக்கு இதுவே பாடமாக அமையும். இதனால்தான், சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் பெருநாள் கொண்டாட்டங்கள் தேவை என்கிறோம். சிறுபான்மையினரை கௌரவிக்கும் அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கம். அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம்
Read More