உள்நாடு

ரணிலுக்கு ஆதரவு சைக்கிள் பேரணி. – பேருவளையில் வரவேற்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து காலி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பிலிருந்து தென்பகுதியை நோக்கி பயணித்த இந்த மோட்டார் சைக்கிள் பேரணி குழுவினருக்கு பேருவளை நகரில் வரவேற்படிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி பேருவளை அமைப்பாளரும் பேருவளை பிரதேச சபை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான ரொஹான் பெற்றிக் பெரேரா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டை கட்டி எழுப்பக்கூடிய ஒரே தலைவர் இன்றைய ஜனாதிபதியே என அவர் இங்கு குறிப்பிட்டார்.

தூர நோக்கும்,உலக நாடுகளின் ஆதரவை பெற்று எமது தாய் நாட்டை சகல துறைகளிலும் எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னேற்றுவார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் உண்டு.எனவே எமது ஜனாதிபதியை நாம் ஆதரிப்போம். அதற்காக எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றாய் கைகோர்ப்போம் என்றார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *