உள்நாடு

க.பொ.த சா/த. 2024. – களுத்துரை மாவட்ட சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்திற்கான இலவச கருத்தரங்கு

எதிர் வரும் 2024.05.06ம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்காக களுத்துறை மாவட்ட ஜனாசா சேவைகள் சங்கத்தின் பூரண அனுசரணையில் சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்திற்கான இலவச கருத்தரங்கு இலவசமாக ஏப்ரல் மாதம் 30 திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.15 வரை பேறுவலை பிரதேச செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

எனவே சிங்கள மொழியில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் கலந்து பயன் பெறுமாறு களுத்துறை மாவட்ட ஜனாசா சேவைகள் சங்கம் வேண்டிக்கொள்கின்றார்கள்.

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *