உள்நாடு

உடைந்துள்ள உக்குவளை கிராம பாதைகளை திருத்தம் செய்துதருமாறு கோரிக்கை..!

சமீபத்தில் பெய்த கடுமழையினால் உக்குவளை மாருகொன மையவாடி பாதை,  குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் உடைந்துள்ளன.
இப் பாதைகளின் நிலைமை பற்றி உக்குவளை செயலகம் , பிரதேசசபைகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானித்துச் சென்றும் இப்பாதைகள் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மாத்தளை   ஐ.தே.க. இணைப்பாளர் எம்.ஹரீஸ் மாத்தளைக்கு வருகைதந்த ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தும் பயன் கிட்டவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறிருக்க கிராம அபிவிருத்திக்கென பிரதேச செயலகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ள நிலையில் அந்நிதியிலிருந்து குறிப்பிட்ட  உடைந்துள்ள இக் கிராம பாதைகளை திருத்தம் செய்துதருமாறு உக்குவளை மாருகொன ஜனாஸா சங்கத் தலைவர் ஏ.ஆர்.எஸ்.ஹமீட் கோரிக்கை (கடிதமூலம்) விடுத்துள்ளார்.
(ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *