உள்நாடு

கற்பிட்டி 37 கிலோ தங்கம் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் 05 நபர்கள்..!

கற்பிட்டியில் 37 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் கற்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தி 37 கிலோ தங்கத்தை திருடிய சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி சுற்றுவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5 பேரும் தமது வீடுகளை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071 8591763 அல்லது 071 8594916 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

 

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *