உலகம்

இப்திகார் அஸீஸின் மறைவையொட்டி பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அனுதாபம்.

ஏப்ரல் 24, 2024 அன்று இலங்கை-பாகிஸ்தான் நட்புறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. இப்திகார் அஸீஸ் அவர்களின் மறைவை ஒட்டி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் திரு. இப்திகார் அஸீஸின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறார். திரு. இப்திகார் அஸீஸ், பாகிஸ்தானின் சிறந்த நண்பராக இருந்ததோடு இலங்கை-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படக்கூடியவை.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது சேவைகளை பாராட்டும் வகையில், பாகிஸ்தான் அரசாங்கம் 2016 செப்டம்பர் மாதத்தில் “தம்கா-இ-கித்மத்” என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *