Uncategorized

கொழும்பு,தெகிவளை,மொரட்டுவை பிரதேசங்களில் 14மணி நேர நீர் வெட்டு.

அம்பதலை நீர் வழங்கள் விஸ்தரிப்பு வேலைத் திட்டத்தில் அத்தியவசிய விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதனால் 27ஆம் திகதி சனிக்கிழமை 27-4-2024 பி.ப. 5.00 மணி முதல் மறுநாள் 28ஆம் திகதி பி.ப. 7.00 மணி வரையிலான 14 மணி நேர நீர் வெட்டு கொழும்பு 5, கொழும்பு 6, தெகிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவை மாநகர சபை பகுதிகள் ஜயன் திபுர மற்றும் பெலவத்த ஆகிய பகுதிகளில் அமலாகும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நீர் வெட்டினால் பாவணையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்து கவலை தெரிவிக்கும் நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை முன்கூட்டியே நீரை சேமித்து சிக்கனமாக பாவிக்கும்படி கேட்டுள்ளது. (மேலதிக தகவல்களுக்காக 1939 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *