உள்நாடு

சபை நிரம்பி வழிய வெற்றிகரமாக நடைபெற்ற 99 ஆவது “வகவ” கவியரங்கு – 100 ஆவது கவியரங்கிற்காக வந்து குவிந்த நல்லுள்ளங்களின் பிரார்த்தனைகள்.

எங்கள் “வலம்புரி” கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கு, நேற்று நேற்று முன்தினம்  (23) செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. வழமை போன்றே, கொழும்பு – பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கவியரங்க நிகழ்வினை, “வகவத்” தலைவர் நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்த, செயலாளர் “இளநெஞ்சன்” முர்ஷிதீன் வரவேற்புரையும், பொருளாளர் ஈழ கணேஷ் நன்றியுரையும் வழங்கினர்.
99 ஆவது கவியரங்கை “இலக்கியச் செம்மல்” – “கலாபூஷணம்” சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் தலைமையேற்று நடாத்தினர். அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் பிரபல ஊடகவியலாளர் சுந்தரதாஸ் (சுந்தர்) சிறப்பதியாகக் கலந்து உரையாற்றினார். அவர் தனதுரையில்> “தலை நகருக்கு வரும் போதெல்லாம் மன நிறைவாக வந்து சமூகமளிக்கும் நிகழ்வாக வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கு அமைகின்றமை, எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. கொஞ்சம் கூட சளைத்து விடாமல் செயல்படுவதும், பழைய புதிய கவிஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் களமாக வகவம் அமைந்திருப்பதும் போற்றுவதற்குரியது.

அந்தப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதை, அடுத்த (மே) மாதம் நடக்கவிருக்கும் 100 ஆவது கவியரங்கு கட்டியம் கூறுகிறது. இப் பயணம் இன்னும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்” என்றார்.bஅண்மையில் எம்மை விட்டும் மறைந்த, எமது படப்பிடிப்பாளர் முஹம்மத் நசாரின் மாமனார், கவிஞர் அரபி சுல்பிகார் ஆகியோருக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்புக் கவியரங்கில், கவிஞர்களான “கலைப்பிரியன்” ஐ.ஏ. காதிர் கான் மௌலவி, லைலா அக்ஷியா, எம். பிரேம்ராஜ், தி. ஸ்ரீதரன், “பிறைக்கவி” முஸம்மில், “வாழைத்தோட்டம்” எம். வஸீர், இ. கலைநிலா, “மினுவாங்கொடை” ஏ. சிவகுமார், எம். எஸ். அப்துல் லதீப், “கம்மல்துறை” இக்பால், “அருந்தவம்” அருணா, எம்.பீ.எஸ். பாலா, நியாஸ் ஏ. சமத், மஸீதா அன்சார், ந. தாமரைச் செல்வி, இ. தமிழ்ப்பிரியன், ஆர். தங்கமணி, “சிந்தனைப் பிரியன்” முஸம்மில், ராஜா நித்திலன், பவானி சச்சிதானந்தன், கே. லோகநாதன், பர்ஹாத் சித்தீக், அப்துல் அஸீஸ், “லிந்துல” நவரட்னம், முத்துக்குமார், வாசுகி வாசு, கமர்ஜான் பீபி, “கலேவெல” அமீன், பொன் தாட்சாயினி, “கிண்ணியா” அமீர் அலி, “வெளிமடை” ஜஹாங்கீர் ஆகியோர் கவிதைப் பூக்களைத் தூவினர்.

எதிர்வரும் மே மாதம் தனது 100 ஆவது கவியரங்கினை, ஒரு விழாவாக நடாத்தவிருக்கும் “வலம்புரி கவிதா வட்டம்”, அன்றைய தினம் வகவக் கவிஞர்களின் “கவிதை நூல்” தொகுப்பினையும் வெளியிடவுள்ளது. அதற்காக தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக, அனைத்து கவிஞர்களும், நலன் விரும்பிகளும் உறுதி கூறினர். “தமிழ்த் தென்றல்” அலி அக்பர், எஸ். தனபாலன், எம்.எஸ்.எம். ஜின்னாஹ், ஆர். தில்லைராஜன், “புரோட்வே” ஹில்மி, சு. ஜெகதீஸ்வரன், எம். பீ. எம். சித்தீக், லியாகத் அலி கான், ரஷீத் எம். றியாழ், இல்யாஸ் தாசிம், அமல் பாண்டி, ஜொயெல் ஜோன்சன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், ஏ.கே. இளங்கோ, கவிதா, றிஸ்மினா ரபீக், “உணர்ச்சிப் பூக்கள்” ஆதில், பி. தங்கவேல், மபாஹிர் மஸூர் மௌலானா, நூருல் ஷிபா, ரஷீத் எம். ஹாயிஸ், ஷப்னா சிராஜுதீன் போன்றோர் இச்சிறப்புச் சபையை மலர்களால் அலங்கரித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

(படங்கள் – முஹம்மத் நசார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *