விளையாட்டு

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு மேலும் இருவர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் தொழில்முறை சார் உதைப்பந்தாட்டத்தில் பங்கேற்கும் மேலும் இரண்டு கால்பந்து வீரர்கள் நேற்று (23) உத்தியோகபூர்வமாக இலங்கை தேசிய அணியில் இணைந்துள்ளனர்.

அதற்கமைய அயர்லாந்தைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரரான சாம் டுரான்ட் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரை சந்தித்து தனது சம்பிரதாயங்களை முடித்தார். அதன்பின்னர் அவருக்கு 13ஆம் இலக்கம் பொரிக்கப்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியின் சீறுடை ஜஸ்வர் உமரால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட லீக்கில் பங்கேற்றுவரும் வேட் டெக்கர் ஜஸ்வர் உமரிடம் தனது ஆவணங்களை ஒப்படைத்து இலங்கை தேசிய கால்பந்து அணியில் இணைந்து கொண்டார் . இந்த நிகழ்வின் பின்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான ஜஸ்வர் உமர் கருத்து வெளியிடுகையில், ”இது அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தெற்காசிய உதைப்பந்தாட்ட தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கான மற்றொரு படியாகும். இலங்கை கால்பந்து அணி தனது புதிய அணுகுமுறையால் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.” என்றார்.

மேலும், இவ்விரு வீரர்களுக்கு முன்னர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பல தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *