உள்நாடு

இலங்கை வந்தடைந்தார் இப்ராஹிம் ரைசி.

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹம் ரைசி சற்று முன் மத்தள விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *