உள்நாடு

முன்னாள் எம்.பீ பாலித தேவாரப்பெரும காலமானார்..!

ஐ.தே க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் ஆன பாலித தேவாரப்பெரும காலமானார். வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில் மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

64 வயதான இவர் தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது சடங்குக்குரிய கல்லறைகளை தான் கட்டுவித்ததாகவும், தன் பிரேதத்திற்கென சாதாரண பிரேதப்பெட்டியொன்றை தயார்செய்யுமாறும், தனக்கான ஆடம்பர பிரேதப் பெட்டிக்கு செலவழியும் பணத்தை வறிய மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு அன்பளிப்பு செய்யுமாறு குடும்பத்தாரிடம் பணித்திருந்தமையும் மேற்கோள் காட்டத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *