உள்நாடு

அஸ்மி யாஸின் எண்ணக்கருவில் உதயமாகவுள்ள 13ஆவது வீடு!

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள தேவையுடைய குடும்பங்களின் வீட்டு வசதிகள் தேவைக்காக OCD அமைப்பின் தலைவரின் எண்ணக்கருவில் நடைமுறைப்படுத்தப்படும் “யாவருக்கும் உறையுள் – 2030” எனும் தொனிப்பொருளில் நிர்மானிக்கப்படவுள்ள 13ஆவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த சனியன்று (13) மலையடிக்கிராமம் – 04 அல்-அக்ஸா பள்ளிவாசல் பிரிவில் அமைப்பின் செயலாளர் சரோஸின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவகருமான அஸ்மி யாஸீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து அடிக்கல் நாட்டிவைத்தார். மேலும் இதில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் நஸீர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர் மொஹம்மட் தம்பி, நூர் பள்ளிவாசல் தலைவரும், அமைப்பின் ஆலோசகருமான அல்-ஹாபிழ் றிப்கான், சம்மாந்துறை தேசிய பாடசாலையின் உப அதிபர் பர்ஸான், கணக்காளர் ஜிப்ரி, அஸ்ஸமா வித்தியாலய அதிபர் அபூபக்கர், ஜனாதிபதியின் இளைஞர் விவகார அமைப்பின் உறுப்பினர் பாஸித், OCD அமைப்பின் செயலாளர் பெரோஸ் உட்பட உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *