உள்நாடு

பிறைட் அமைப்பினரால் அதிதிகளுக்கு கௌரவம்..!

பாலமுனை பிறைட் அமைப்பின் இப்தார் நிகழ்வு பாலமுனை தனியார் மண்டபத்தில் அதன் தலைவர் ஏ.எல்.எம்.அர்தாத் தலைமையில் (09) நடைபெற்றது.

இந் நிகழ்வில்  தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக எம்.கே. இப்னு அசார் பிறைட் அமைப்பின்  ஆலோசரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  (ஏ.எஸ்.பி ) பாலமுனை ஜூம்ஆப்பள்ளி  தலைவர் எம்.ஏ.அன்சார் மற்றும் முன்னாள் அட்டாளைசேனை பிரதேசசபை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், எம்.ஏ.எம்.அபூபக்கர், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பிறைட் அமைப்பினரால் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பிறைட் அமைப்பின் புதிய டீசெட் அங்கத்தினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *