உலகம்

ஆப்கான் வெள்ளத்தில் 33 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.இது குறித்து தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளமானது பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளது.இந்த வெள்ளத்தில் 600 இக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 200 இக்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்துள்ளார். பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *