உள்நாடு

சிறப்பாக நடந்து முடிந்த கஹட்டோவிட்ட ஈத் தின விளையாட்டு போட்டிகள்..!

கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று கஹடோவிட வெஸ்டர்ன் கமெண்வெல்த் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஈத் தின விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக கமத்தை மைதானத்தில் நடந்தேறியது.

காலை 9.30 மணி அளவில் மரதன் போட்டிகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டு போட்டிகளின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடைபெற்றது.
பாலர் முதல் பெரியோர் வரையான சகல வயதினரையும் உள்ளடக்கி மொத்தமாக நடந்த 38 போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காலையில் நடந்த மரதன் போட்டிகளில் மாத்திரம் 142 பேர் கலந்து கொண்டதுடன் சிறார்களை சந்தோஷப்படுத்தும் பல நிகழ்வுகளும் நடந்தேறின.

முதல் முறையாக 1999ம் ஆண்டு ஈத் தின விளையாட்டு போட்டிகளை நடத்திய வெஸ்டர்ன் கமண்வெல்த் அமைப்பு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டும் போட்டிகளை மீள ஆரம்பித்தது பிரதேச மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

 

(அப்ஹாம் நிஸாம்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *