உள்நாடு

ஹோந்தெனிகொட ஷரபிய்யா அரபுக்கல்லூரியினால் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் அர்சாத் நஸ்ருல்லாஹ் முதலிடம்..!

2024 ரமழானை முன்னிட்டு மாவனல்லை, ஹிங்குலோயா, ஹோந்தெனிகொட லேனில் அமைந்துள்ள ஷரபிய்யா அரபுக்கல்லூரியினால்,  மாவனல்லை மற்றும் மாவனல்லைக்கு அருகில் உள்ள தரம் 5க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.

இதில் ஜூஸ்உ அம்ம (முழுமையாக) ஜூஸ்உ தபாரக அல்முல்க், அல்கலம், அல்ஹாக்கா, அல்மஆரிஜ் ஆகிய ஸூராக்களை உள்ளடக்கி நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் ஆண்களுகான பிரிவில் சுமார் 35 பேர் பங்கு பற்றினர்.

இப் போட்டி நிகழ்ச்சியில் தல்கஸ்பிட்டியைச் சேர்ந்த அர்சாத் நஸ்ருல்லாஹ் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதற்கான சான்றிதழ் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 06/04/2024 அன்று ஹோந்தெனிகொட மஸ்ஜிதில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *