உள்நாடு

கல்பிட்டியில் நோன்புப் பெருநாள் தொழுகை..!

கல்பிட்டியின் 3 ஜும்ஆப் பள்ளிவாசல்களின் பிரதான ஏற்பாட்டிலும் ஏனைய தக்யாப்பள்ளிவாசல்களின் பங்கேற்புடனும் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் நேற்று (10) புனித நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான கல்பிட்டி வாழ் ஆண்கள் பங்கேற்றிருந்தனர். ஆண்களுக்கான தொழுகை சரியாக காலை 6.45 மணிக்கு ஆரம்பித்திருந்தது. புனிதமிக்க பெருநாள் தொழுகையை அஷ்ஷெய்ஹ் மௌலவி ஆஷிம் நடாத்தியிருக்க விசேட பெருநாள் குத்பாப் பிரசங்கத்தினை அஷ்ஷெய்ஹ் மௌலவி அன்வர் சாத் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களுக்கான பெருநாள் தொழுகை அந்தந்த பிரதேச பள்ளிவாசல்களில் காலை 8 மணிக்கு இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *