உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி திடல் தொழுகை..!

ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையானது கஹட்டோவிட பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரும் திராளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஜும்ஆ பிரசங்கத்தை அஷ்ஷெய்க் இனாமுல்லாஹ் ஸலபி நிகழ்த்தினார்கள்.
குத்பா உரை “இரத்த உறவுகளை சேர்ந்து நடத்தல்” என்ற கருப்பொருளில் அமைந்திருந்தது. இரத்தினச் சுருக்கமாக அமைந்த இவ்வுரை, நபிகளாரின் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் அவரது இரத்த உறவினர்கள் மற்றும் கோத்திரத்தால் அவர் பட்ட இன்னல்கள், இழப்புக்களை நினைவுபடுத்தி.. அவ்வாறாக நபிகளார் துன்பப்பட்ட நிலையிலும் மக்கா வெற்றி என்ற மாபெரும் உயர் நிலையை அடைந்த போது தன் உறவினர்களையும் கோத்திரத்தையும் மன்னித்து சுதந்திரமாக விட்ட சம்பவமானது உறவுகளை சேர்ந்து நடப்பதற்கான சிறந்த உதாரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *