உள்நாடு

புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் ஆதாரங்களுடன் அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்..

ஹிஜ்ரி – 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு, இன்று (09) செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில், கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று (09) நாட்டின் எப்பிரதேசத்திலாவது புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால், தகுந்த ஆதாரங்களுடன் 0112 432 110, 0112 451 245, 0777 316 415 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல், அனைத்து முஸ்லிம் மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *