உள்நாடு

இன்று புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் நாள்இ இன்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்னராகும் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம், புனித ஷவ்வால் மாதத்­திற்­கான பிறை பார்க்கும் மாநாடு, எதிர்­வரும் செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்­ளி­வா­சல் மாநாட்டு மண்டபத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இம்மாநாட்டில், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­ – இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­டலுவல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *