உள்நாடு

ஹெல்ப் எவர் நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம்_ 2024

2019.04.21 அன்று இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் 5ஆம் வருட நினைவாக “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் ஹெல்ப் எவர் நடாத்திய இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வைத்திய முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் திருமதி கீர்த்திகா மதனழகன் , தாதியர் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஹெல்ப் எவர் நிறுவன உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் குருதியைத் தானமாக வழங்கிய குருதிக் கொடையாளர்களுக்கு இவ் அமைப்பினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *