உள்நாடு

புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் நாள், எதிர்­வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்னராகும் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம், புனித ஷவ்வால் மாதத்­திற்­கான பிறை பார்க்கும் மாநாடு, எதிர்­வரும் செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்துஇ கொழும்பு பெரிய பள்­ளி­வா­சல் மாநாட்டு மண்டபத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இம்மாநாட்டில், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­ – இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *