உள்நாடு

கஹட்டோவிட்டாவை சேர்ந்த சகோதரர் ஷாஜஹான் அவர்களின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி கோரல்

கஹட்டோவிட்டாவை சேர்ந்த சகோதரர் ஷாஜஹான் அவர்களின் இறு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் தகப்பனாரான இவருக்கு வயது 43 சாதாரண தொழில் ஒன்றையே செய்து வரும் இவருக்கு குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், சாப்பாட்டு தேவைகளுக்குமே போதாத பொருளாதார நிலையில் காணப்பட்ட இவருக்கு தற்போதைய நோய் வீரியம் காரணமாக எதுவுமே செய்ய முடியாது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகின்றார்.

கிழமைக்கு மூன்று Dialysis செய்ய தேவையிருப்பினும் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியினாலும், ஜனாதிபதி நிதியத்தாலும் வழங்கப்படும் இரண்டு Dialysis மாத்திரமே செய்யப்படுவதாகவும் இன்னும் ஒரு Dialysis செய்வதற்கு வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளதாகவும் அதற்கான செலவு ரூபாய் 12000 வரை காணப்படுவதாகவும் எதிர் கொண்டுள்ள இக்கட்டான நிலை காரணமாக அதனை செய்ய முடியாது இருப்பதாகவும்> மருந்து மாத்திரைகளால் இவற்றை குணப்படுத்த முடியாது என்பதனால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவிப்பதாகவும் சகோதரர் ஷாஜஹான் தெரிவிக்கார்.

தனக்கு தேவையான O positive சிறுநீரக வழங்குனர் இன்னும் தேடிக்கொண்டு இருப்பதாகவும் யாராவது கிடைத்தால் உடனடியாக சத்திரி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.எனவே இதற்காக சுமார் 65 முதல் 70 இலட்சம் வரையான பெரிய நிதித்தொகை தேவைப்படுவதாகவும் இதனை தன்னால் மேற்கொள்ளும் வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்களின் உதவியை இதற்காக நாடுவதாகவும் தெரிவிக்கின்றார்.

எனவே குறித்த சகோதரரின் அவசர தேவையை உணர்ந்து இந்த புனித ரமழான் மாதத்தின் இறுதி தருவாயில் உங்களது ஸதகாக்கள்,ஸகாத்களை குறித்த சகோதரரின் மேற்படி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கும் உயிராபத்தில் இருந்து அவரை காப்பாற்றி சந்தோசமாக அவரை குடும்பத்துத்துடன் வாழ்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறும் கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியல் தளம் மேற்படி சகோதரரரின் விடயம் உண்மையானது என்றும் அதற்காக அனைவருக்கும் தம்மாலான அனைத்து நிதி உதவிகளையும் வழங்கி வல்லவன் அல்லாஹ்வின் மேலான நற்கூலியை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் உதவித்தொகையை கீழுள்ள அவரது மனைவியின் கணக்கிலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் வைப்பிலிடப்பட்டது பற்றி உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் எனில் கீழுள்ள இலக்கத்துக்கு தொடர்பு கொண்டோ குறும் செய்தி அல்லது வட்ஸப் மூலம் தெரிவிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கணக்கிலக்கம்

மக்கள் வங்கி
நிட்டம்புவ கிளை
278200150084790.

எம்.ஏ.எப் மஸ்லியா .

தொலை பேசி இலக்கம்.
0703790623

இதனை அதிகம் பகிர்ந்து உங்களால் முடிந்த உதவியை செய்து இவருக்கு தேவையான நிதியை திரட்டி கொள்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ் -கஹட்டோவிட்ட)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *