விளையாட்டு

பாகிஸ்தான் மகளிர் அணி வீராங்கனைகள் விபத்தில் சிக்கினர்.

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான பிஸ்மா மஹ்ரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் சென்ற கார் நேற்று (6) விபத்தில் சிக்கி இருவரும் இலேசான காயத்துடன் உயிர் தப்பியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியின் மருத்துவக்குழு அவர்களுக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக எதிர்வரும் 18ஆம் திகதி பாகிஸ்தான் மண்ணிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து ரி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான பயிற்சி முகாமில் பாகிஸ்தான் மகளிர் அணியினர் பங்கேற்கவுள்ள நிலையில் இவ் இருவரும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தான் மகளிர் அணி ரி20 தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக ரி20 தொடரை கைப்பற்றியதுடன் 2018 இல் பங்களாதேஷ் மகளிர் அணியை வீழ்த்திய பிறகு வெளிநாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றியது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *