உள்நாடு

வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் இப்தார் விசேட வைபவம்

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்;டில் வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற நோன்பு திறக்கும் இப்தார் விசேட வைபவம் கண்டி லேக் வீதியில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூவர் இல்லத்தில் உயர்ஸ்தானிகர் டாக்டர் எஸ் ஆதிரா தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மௌலவி பஸ்லுர் ரஹ்மான் மார்க்கச் சொற்பொழிவினையும் நோன்பு திறக்கின்ற அதானையும் துஆப் பிரார்த்தனையும் மற்றும் மஹ்ரிப் தொழுகையினையும் நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் ஏ. பீர்முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(இக்பால் அலி)

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *